சுவாச நோய் காலம் (Respiratory Illness Season) தொடங்கவுள்ள நிலையில், ஒன்ராறியோ மாகாணத்தில் வசிக்கும் அனைவருக்கும் காய்ச்சல் (Flu) மற்றும் மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர சுவாச நோயை ஏற்படுத்தும் Respiratory Syncytial Virus க்கான தடுப்பூசி திட்டம் ஆனது, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலப்பகுதியில் வசிப்பவர்கள், பணிபுரிபவர்கள் அல்லது கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் என அந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது.
இந்த சுவாச நோய் காலப்பகுதியில் தொற்றைத் தடுப்பதற்கும், நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கும் காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
