லாங்கெயில் (Longueuil) காவல்துறையினரால் 15 வயது இளைஞன் நூரன் ரெசாய் (Nooran Rezayi) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்களின் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நீதி கேட்டு, நூற்றுக்கணக்கானோர் வார இறுதி நாட்களில் பேரணிகளில் திரண்டு, அரசாங்கம் இதில் தலையிட்டு பொது விசாரணை நடத்த வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு உடற்கேமராக்கள் (Bodycams) கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
செப்டம்பர் 21-ஆம் தேதி ரெசாய் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சனிக்கிழமை அன்று ஒரு அமைதிப் பேரணி நடந்தது.
ரெசாயின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அவர் சுடப்பட்டபோது நிராயுதபாணியாகவே (unarmed) இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
இது, ரெசாய் முகமூடியுடன் ஆயுதம் ஏந்திய நபராக இருந்ததாக, விசாரணைக் குழு அளித்த ஆரம்பத் தகவலுக்கு முரணாக உள்ளது.
சமூக ஆர்வலர்கள் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் இரு நாட்களாக லாங்கெயில் வீதிகளில் நீதி கேட்டுப் போராடியுள்ளனர்.
நூரன் ரெசாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக லாங்கெயில் காவல் துறை தலைமையகத்தை நோக்கி இரண்டாவது பேரணி நடைபெற்றது.
இதில், அதிகாரிகளுக்குப் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த, உடற்கேமராக்களைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.
