காணாமல் போயிருந்த நோர்வே நாட்டு பயணியான ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் (Steffen Skjottelvik) என்பவரின் சடலம், வடக்கு மனிடோபாவில் உள்ள யார்க் ஃபேக்டரி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இது ஒரு முடிவாக அமைந்துள்ளது.
அவரது ஜாக்கெட் மேலங்கி கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவில் ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், அவரது சடலம் ஹெலிகாப்டர் மூலம் கில்லம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வின்னிபெக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்கியோட்டெல்விக் காணாமல் போனதை அறிந்ததும், ஃபோர்ட் செவெர்ன் பழங்குடி சமூகத்தினர் தாமாக முன்வந்து தேடுதல் பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
