கியூபெக் மாகாணத்தின் லோவர் நார்த் ஷோர் பகுதியில் உள்ள செயிண்ட்-அகஸ்டின் ஆற்றில், படகில் இருந்து தவறி விழுந்த ஒருவரை தேடும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இப்பணியில் உள்ளூர் மற்றும் மாகாண காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேடுதல் பணியில் கனடிய இராணுவமும் இணைந்துள்ளது.
ஒரு நபர் தனது சிறிய படகின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாக 911 அவசர அழைப்புக்கு தகவல் கிடைத்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முதலில் அந்த நபரை கண்டறிந்த போதும், சிறிது நேரத்திலேயே அவர் மீண்டும் மறைந்து போனதாகவும் பாக்குவா ஷிப்பி காவல்துறை தெரிவிக்கின்றது.
இந்த தேடுதல் பணிக்கு ஒரு ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
