உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது 50% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகையின்செயலாளர் விளக்கமளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25வீத வரியுடன் கூடுதலாக 25 வீத வரி விதிக்கப்பட்டு, இந்தியாவின் இறக்குமதி வரி 50 வீதமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டு, போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.
ட்ரம்ப் பதவியில் இருந்திருந்தால், இந்த போரே மூண்டிருக்காது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அதை உறுதி செய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த 48 மணி நேரத்திற்குள், ஐரோப்பிய தலைவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு விரைந்து வந்து ட்ரம்பை சந்தித்தனர்.
போரின் போக்கு மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்த ட்ரம்பின் விளக்கங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் முந்தைய நிர்வாகம் இதை செய்யத் தவறியது’ என்று குறிப்பிட்டார்.


