சிம்பாவே நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சிம்பாவே நாட்டில் சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய தருணத்தில் 2,550 யானைகள் வசிக்கின்ற காரணத்தால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் மோதல் ஏற்படுகின்றது.
இதனடிப்படையில் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையிலான மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


