நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த குற்றச்சாட்டில் தமிழக அரசியல்வாதி சீமான் மீது வழக்கு பதிவு செய்ய, காவல்துறைக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமானின் பேச்சு குறித்து சட்டத்தரணி சார்ல்ஸ் அலெக்சாண்டர் என்பவரால் சென்னை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சென்னை மேல் நீதிமன்றத்தில் அவர் முறைப்பாடளித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணையின் போதே சென்னை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
