கொங்கோவில் உள்ள தேவாலயமொன்றில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு கொங்கோவின் கோமாண்டோ பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவலாயமொன்றில் நேற்று ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது தேவாலயத்துக்குள் புகுந்த நேச நாட்டு ஜனநாயக படை என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


