சீனாவில் கனமழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாகச்சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்ததால் 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் மண்சரிவு ஏற்பட்டு, 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக மழை, வெள்ளத்தில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
