கனேடிய ஏற்றுமதிகள் மீது 35% வரியை அமெரிக்கா விதிப்பதற்கு காரணமான போதை மருந்தான ‘பென்டனில்’ குறித்த விவகாரத்தில், கனடா – அமெரிக்கா வர்த்தக உறவு தற்போது சிக்கலான கட்டத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் “அடுத்த சில நாட்களில்” நேரடியாக பேசக்கூடும் என கனடா–அமெரிக்க வர்த்தகப் பொறுப்பாளர் டொமினிக் லெபிளாங்க் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவும் கனடாவும் ஒருவருக்கொருவர் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்குகள் வகிக்கின்றன எனவும் தாம் அதற்கேற்ற வகையில் ஒரு நல்ல ஒப்பந்தத்திற்காக பாடுபடுவதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை முடித்து விரைவில் நாடு திரும்பிய லெபிளாங்க், உடனடி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றாலும், அமெரிக்காவின் கவலைகளை தமது தரப்பினர் நன்கு புரிந்து கொண்டதாகவும் கூறினார்.
