குடிபோதையில் வாகனம் செலுத்தியதற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதியொருவர் நுவரெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேருந்தானது நீர்கொழும்பை சென்றடைய இருந்த நிலையில் நுவரெலியாவில் பொலிஸார் அதனை சோதனையிட்டபோது சாரதி குடிபோதையில் இருந்தமை தெரியவந்தது.
சாரதியின் இருக்கைக்குப் பின்னால் சட்டவிரோத மதுபானத்தையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சாரதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
