எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்றால், லாவால் பகுதியில் உள்ள ‘சித்தே-டி-லா-சாந்தே’ (Cité-de-la-Santé) மருத்துவமனையை விரிவுபடுத்தி நவீனமயமாக்கும் திட்டத்திற்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும் என, கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) உறுதியளித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாணத் தேர்தலை முன்னிட்டு, லாவால் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
‘சித்தே-டி-லா-சாந்தே’ (Cité-de-la-Santé) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கவும், நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தால், இந்த மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்காகக் கூடுதலாக 108 புதிய படுக்கைகள் திறக்கப்படும் என, மிலியார்ட் வாக்குறுதி அளித்துள்ளார்.

