கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது.
புலம்பெயர் மக்களைக் கட்டுப்படுத்த கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.
அதேபோல் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா, தற்காலிகத் தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ கனேடிய பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினுடைய விசாக் காலம் நிறைவடைந்த பிறகும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவர்களது விசாவினுடைய காலம் முடியும் முன்பே இரத்துச் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.