நாம் தமிழர் கட்சியின் தலைவர்
சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்ட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழக அரசியலில் கூறி வரும் கருத்துகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாக மாறின. அவரது பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து வரும் நிலையில் சீமானின் வீட்டை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டதாக 10 பேரை சென்னையில் பொலிஸார் கைது செய்துள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி இருந்த அவர்கள், பெற்றோல் குண்டு வீச திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு செல்ல முயன்றபோது பொலிசாரிடம் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.