கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்லயென தெரிவிக்கப்படுகிறது.
இந்த போலித் துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
