ஒட்டாவா நகர அவசரகால மருத்துவ சேவையில் (Ottawa Paramedic Service) பணியாற்றும் ஊழியர்கள் பணியின் போது பரவலான வன்முறையை எதிர்கொள்வதாக, நகர தலைமைத் கணக்காய்வாளரின் (Auditor General) அறிக்கை அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
கணக்காய்வாளர் அலுவலகம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு துணைமருத்துவ ஊழியரும் பணியிடத்தில் வன்முறையை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், எதிர்கொள்ளும் வன்முறைகளை, மருத்துவ சேவை நிர்வாகத்திடமோ அல்லது காவல்துறையிடமோ புகாரளிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
37% துணைமருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் இத்தகைய வன்முறை அல்லது வன்முறை மிரட்டல்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர்.
21% துணைமருத்துவ ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் இத்தகைய வன்முறை சம்பவங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்குப் பதிலளித்த துணைமருத்துவ ஊழியர்களில் 82 சதவிகிதத்தினர் தாம் வன்முறையை அனுபவித்தபோதும், அதைப் பற்றி முறையாகப் புகாரளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
