டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு (TTC) அடுத்த ஆண்டு டண்டாஸ் நிலையத்தில் Platform edge கதவுகளை அமைக்கும் முன்னோடித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதற்குப் பதிலாக, இந்த திட்டத்தை 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகளில் ஒரு பகுதியாகக் கருத்தில் கொள்ள ஒரு குழுவைக் கேட்கும் என்று போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிக செலவுகள் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றன.
Platform edge கதவுகள் என்பவை, மெட்ரோ ரயில்கள் நிற்கும் தளத்தையும், தண்டவாளங்களையும் பிரிக்கும் தடுப்புகளும், கதவுகளும் ஆகும்.
ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது, Platform edge கதவுகள் திறந்து பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கின்றன.
மேலும், மக்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் தண்டவாளங்களில் விழுவதைத் தடுக்க இந்த Platform edge கதவுகள் உதவுகின்றன.
பாதுகாப்பு, விபத்துகளைத் தவிர்ப்பது, மற்றும் தற்கொலை முயற்சிகளைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கங்களாகும்.
டொராண்டோ போக்குவரத்து ஆணைக்குழு பல ஆண்டுகளாக இந்த Platform edge கதவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
