சாஸ்காட்செவானில் 2022ஆம் ஆண்டு காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட ரியான் புக்கர் என்பவரின் மரணம் தொடர்பான விசாரணை, எந்தவித பரிந்துரைகளும் இன்றி முடிவடைந்துள்ளது.
இது தமக்கு பெரும் ஏமாற்றத்தையும், ஆறுதலின்மையையும் அளித்துள்ளதாக புக்கரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் நடந்த இந்த மரண விசாரணையின் இறுதி நாளான புதன்கிழமை, ஜூரி சபை, புக்கரின் மரணமானது ஒரு தற்கொலை என அறிவித்தது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி, புக்கர் மூஸ் ஜா மற்றும் ரெஜினாவுக்கு இடையில் உள்ள பெல்லே ப்ளைன் அருகே, நெடுஞ்சாலை 1 இல், ஆறு மணி நேரம் காவல்துறையுடன் ஒரு முரண்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த மரண விசாரணை ஒரு குற்றவியல் நடவடிக்கை அல்ல எனவும் மேலும் குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
