Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

டிசம்பர் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டித்வா புயல் நினைத்துப்பார்க்கமுடியாத இழப்பை ஏற்படுத்தி, இலங்கையில் பல குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் பேரழிவையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. கனடா, பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இருந்து, மனிதாபிமான உதவியைத் தொடர்ந்து வழங்கி, சமூகங்களின் மீட்சிக்கும், அவை மீளக்கட்டியெழுப்பப்படுவதற்கும் உதவியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசர உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இரண்டு மில்லியன் டொலரிலும் அதிகமான மனிதாபிமான நிதி உதவியை வழங்குவதாக ராஜாங்க செயலாளர் (சர்வதேச அபிவிருத்தி) கௌரவ ரண்டீப் சறாய் (Randeep Sarai) இன்று அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உடனடியாக உணவைப் பெறுவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 4 மில்லியன் டொலர் வழங்கப்படுகிறது. மனிதாபிமான கூட்டிணைவின் ஓர் உறுப்பு அமைப்பான World Vision Canada விற்கு, கனடா மனிதாபிமான உதவி நிதியத்தின் ஊடாக, உதவிப் பொருட்கள், அவசர தங்குமிடம் ஆகியவற்றையும், நீர், தூய்மைப்படுத்தல் மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகளை வழங்குவதற்காகவும் 350,000 டொலர் வழங்கப்படுகிறது.

மேலும் கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தால் முகாமைப்படுத்தப்படும் பேரிடர் உதவி அவசர நிதியத்தின் ஊடாக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தற்போதைய உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 215,000 டொலர் வழங்கப்படுகிறது. அவசர உதவியை வழங்குவதற்காக, உள்ளுர் முன்முயற்சிகளுக்கான கனேடிய நிதியத்தின் ஊடாக ஏறத்தாழ 70,000 டொலர் வழங்கப்படுகிறது. கனடா நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், மாறும் தேவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக அனுபவமுள்ள பங்காளிகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகிறது எனவும்   சர்வதேச அபிவிருத்திக்கான ராஜாங்க செயலாளர் கௌரவ ரண்டீப் சறாய் (Randeep Sarai) தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி 7 நாட்டவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை!
அடுத்த செய்தி இராணுவத்தை வெளியேற்றி உள்ளக விளையாட்டு அரங்கை அமையுங்கள்-யாழ் மாநகரசபையில் தீர்மானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜூன் 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து

பிப்ரவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

ஜூலை 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு நகரில் சைக்கிள் திருடியவர் கைது….

மே 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?