நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனிடம் ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோருக்கு கையளித்திருந்தனர்.
தற்போது அரசாங்கமானது ஒரு கிலோ நெல்லை 120 ரூபாவால் கொள்வனவு செய்கின்றது. இது உற்பத்தி செலவுக்கு போதுமானதாக இல்லை எனவும் 135 ரூபாவுக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


