மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் (Montreal Children’s Hospital) அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குத் தட்டம்மை (Measles) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து, கியூபெக் பொது சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட நாட்களில் மருத்துவமனைக்கு வந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தட்டம்மை மிகவும் வேகமாகப் பரவக்கூடிய காற்றுவழித் தொற்று என்பதால், அந்த நேரத்தில், மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மொண்ட்ரியல் குழந்தைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பரிசோதனை மையம் முதலான இடங்களுக்குச் சென்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


