சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாதிரியார் பிரையன் புஷே (Brian Boucher), சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் பாதிக்கப்பட்ட ஒருவரை மீண்டும் மீண்டும் சந்தித்து அச்சுறுத்தியதால், மொன்றியல் நகரின் முக்கிய பகுதிகளுக்குள் நுழைவதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடா பரோல் போர்ட் (Parole Board of Canada) எடுத்துள்ள இந்த முடிவு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடையே நிலவி வந்த அச்சத்தைப் போக்கும் வகையில் அமைந்துள்ளது.
63 வயதான பிரையன் புஷே, 1995 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக, 2019-ஆம் ஆண்டில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
கனடா சட்டப்படி தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே (StatutoryRelease) கடந்த 2024 ஜூலை மாதம் அவர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் விடுதலையான பிறகு, தான் பாலியல் வன்கொடுமை செய்த அதே நபரைச் சில இடங்களில் தற்செயலாகச் சந்தித்துள்ளார்.
அப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக, சவாலான எதிர்ப்பு சார்ந்த முறையில் அவரைப் பார்த்ததாக (Eye Contact) புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம் மற்றும் பரோல் போர்டு, புஷே மீது பின்வரும் புதிய தடைகளை விதித்துள்ளது.


