Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை உயர்வு!

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் உயிரிழப்போரின் உடல்கள் உறவினர்களால் உரிமை கோரப்படாமல் கைவிடப்படும் சம்பவங்களின்
எண்ணிக்கை அண்மைக்காலமாக இருமடங்காக அதிகரித்துள்ளது, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்கள், இறுதிச் சடங்குச்
செலவுகளைச் செலுத்த முடியாத பொருளாதார நெருக்கடி மற்றும் முதியோரிடையே நிலவும் சமூகத் தனிமைப்படுத்தல் ஆகியவையே
இந்நிலைக்கு முதன்மைப் காரணங்கள் எனத் தெரியவந்துள்ளது.

சாந்தே கியூபெக் (Santé Québec) அமைப்பின் புதிய புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் 448 ஆக இருந்த உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 992 ஆகவும், தற்போது 1,000-க்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் (Montreal) நகரிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகின்ற போதிலும், அண்மைக்காலமாக லோரென்டைட்ஸ் (Laurentians) மற்றும் லானோடியர் (Lanaudière) போன்ற புறநகர்ப் பிராந்தியங்களிலும் இந்நிலைமை கணிசமாக அதிகரித்துள்ளது.

கியூபெக்கில் ஒருவர் இறக்கும்போது, அவரது உடலை உரிமை கோர உறவினர்கள் முன்வரவில்லை என்றாலோ அல்லது பொலிஸாரால்
உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, கியூபெக் மாகாண அரசு உடலின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தகனம் மற்றும்
அடக்கம் செய்ய ஈமச்சடங்கு நிறுவனங்களுக்கு (Funeral Homes) அனுமதி வழங்குகிறது.

தற்போது கியூபெக் மாகாண அரசு வழங்கும் இறப்புக்கால நிதியுதவி (Death Benefit) 2,500 டொலர்களாக மட்டுமே உள்ளது. தற்போதைய பணவீக்கச் சூழலில் ஈமக்கிரியைகள் மற்றும் மயானக் கட்டணங்களைச் செலுத்த இந்தத் தொகை எவ்வகையிலும் போதுமானதாக
இல்லை எனலே பெடிட்ஸ் பிரேர்ஸ் (Les Petits Frères) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கேத்தரின் ஹேரல் பூர்டன் (Catherine Harel Bourdon)
தெரிவித்துள்ளார்.

எனவே, ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியமான முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த இறப்புக்கால நிதியுதவியை $5,000 டொலர்களாக உயர்த்த வேண்டும் என, கியூபெக் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் கோர விபத்து – லொறியுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி.
அடுத்த செய்தி நிதிப் பற்றாக்குறையால் மொன்றியல் பொதுப்போக்குவரத்துச் சேவைகளை விரிவாக்குவதில் சிக்கல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!

ஜூன் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

மார்ச் 9, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

ஏப்ரல் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?