அமெரிக்காவில் சுற்றுலா சென்றிருந்தபோது, தனது 9 வயது மகள் மெலினாவைக் (Melina) கொலை செய்து, அவரது உடலை மறைத்து வைத்த குற்றச்சாட்டில், மொன்றியலைச் சேர்ந்த லூசியானோ பிரட்டோலின் (Luciano Frattolin) என்ற தந்தை, குற்றவாளி என, நியூயோர்க் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுமார் மூன்று வாரங்களாக இடம்பெற்ற விறுவிறுப்பான விசாரணைகளின் முடிவில், கூடிய நடுவர் குழு (Jury), அவர் மீது சுமத்தப்பட்ட கொலை மற்றும் மனித உடலை மறைத்து வைத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது லூசியானோ பிரட்டோலின் எந்தவித உணர்ச்சியும் இன்றி அமைதியாக இருந்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் கைவிலங்கிடப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உயிரிழந்த மெலினாவின் தாயார் காலி கலானிஸ் (Kali Galanis) பாதுகாப்புக் கருதி நீதிமன்றத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

