கியூபெக் பிராந்தியத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு வாகன விபத்துகளில் சிக்கி, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு மரணங்களும் வெறும் 30 நிமிட இடைவெளிக்குள் பதிவாகியுள்ளதாக கியூபெக் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
செயின்ட்-எலி-டி-காக்ஸ்டன் (Saint-Élie-de-Caxton) பகுதியிலுள்ள ரங் செயின்ட்-ஜோசப் (Rang Saint-Joseph) பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிலப்பகுதியில், அதிவேகமாகச் சென்ற ‘ஏடிவி’ ரக வாகனம் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற நிக்கோலட் (Nicolet) பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கியூபெக் மாநில காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் டெஷைஸ் (Frédéric Deshaies) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்து பதிவாகி அடுத்த 30 நிமிடங்களுக்குள், மற்றுமொரு ‘ஏடிவி’ வாகன விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்துகள் நிகழ்ந்த இடங்களுக்கு கியூபெக் மாநில காவல்துறையின் விபத்து சார் புலனாய்வு நிபுணர்கள் (Crash Investigators) விரைந்துள்ளனர்.
விபத்து நடந்த சூழல், அதற்கான காரணங்கள் மற்றும் வாகனங்களின் வேகம் குறித்து அவர்கள் தீவிரமாக பகுப்பாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
