கியூபெக் மாகாணத்தில் தஞ்சம் கோரியுள்ள அகதிகள் (Asylum Seekers), மலிவு விலை அரசு மானியம் பெறும் குழந்தைகள் பராமரிப்பகங்களின் (Subsidized Daycare) வசதியைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என்ற மாகாண அரசின் விதியை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த நடைமுறை பெண்களுக்கு எதிரானது மற்றும் பாகுபாடானது என்று கூறி, 8-1 என்ற விகிதத்தில் நீதிபதிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு பெரும்பாலும் பெண்களிடமே இருப்பதால், அவர்களுக்கு மலிவு விலை குழந்தைகள் பராமரிப்பகங்களின் வசதியை மறுப்பது அவர்களை வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துகிறது.
மலிவு விலை வசதி இல்லாததால், அகதி குடும்பங்கள் தனியார் டே-
கேர்களில் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது அல்லது வேலைக்குச் செல்ல முடியாமல் அரசின் உதவித் தொகையை (Welfare) நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வழங்கும் கியூபெக் அரசு, எதிர்காலத்தில் மாகாணத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாறப்போகும் அகதிகளுக்கு மட்டும் இதனை மறுப்பது நியாயமற்றது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
காங்கோ நாட்டைச் சேர்ந்த பிஜோ சிபுவாபுவா கன்யிண்டா (Bijou Cibuabua Kanyinda) என்ற பெண், 2018-ஆம் ஆண்டில் கியூபெக் மாகாணத்தினுள் நுழைந்து வேலை அனுமதி பெற்றிருந்தும், அவரது மூன்று குழந்தைகளுக்கு மலிவு விலை குழந்தைகள் பராமரிப்பகங்களின் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்தப் பெண் தொடர்ந்த வழக்கில், கியூபெக் மாகாண அரசு இப்போது மூன்றாவது முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது.
