மொன்றியலில் வாழும் புகழ்பெற்ற வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’ தனது சொந்தப் பார்வை இழப்பு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள ‘த ஜெல்லிஃபிஷ்’ (The Jellyfish) நாவல், தற்போது சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
சமந்தா லெரிச்-கியோனெட் என்ற இயற்பெயரைக் கொண்ட வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’ இன் கண்களில் சிறிய புள்ளிகள் போன்ற ‘ஃபுளோட்டர்ஸ்’ (Floaters) பாதிப்பு ஏற்பட்டது.
இது 2021-ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கண் பார்வையை முழுமையாக இழக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.
இந்தத் துயரமான பயணத்தை ஒரு கற்பனைக்கதை மூலம் உலகிற்கு விளக்க அவர் முடிவு செய்தார்.
பார்வை இழக்கும் ஒருவரின் வலியை வாசகர்கள் நேரடியாக உணர முடியும் வகையில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறந்த படைப்பிற்காக 2025-ஆம் ஆண்டின் ‘சர்வதேச கிராபிக் மெடிசின்’ விருது, கலைஞர் பூம்-க்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
