முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலேயே தங்கிப் பராமரிப்புப் பெறுவதற்காக, கியூபெக் அரசு அறிவித்துள்ள 107 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டம், ஒரு “கண்துடைப்பு” என்று சமூக ஆர்வல அமைப்புகள் கடுமையாகச் சாடியுள்ளன.
முன்னாள் சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் துபே பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நேற்று இந்தப் புதிய திட்டத்தை வெளியிட்டார்.
இதற்கு மொத்தமாக 107 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி குடும்பப் பராமரிப்பாளர்களுக்கான உதவித்தொகை உடனடியாக 1.1 மில்லியன் டொலராக உயர்த்தப்படும்.
இதுவரை அங்கீகரிக்கப்படாத குடும்ப உறுப்பினர்களையும் ‘சேவை வழங்குநர்களாக’ ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
