Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆகஸ்ட் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Smoke rises from an oil refinery after what authorities said was a Ukrainian drone attack, in the course of Russia-Ukraine conflict, in Nizhnekamsk, Tatarstan Region, Russia, August 10, 2026, in this still image obtained from a social media video. Social Media/via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES. NEWS USE ONLY. VERIFICATION: Buildings, trees, wall colour, roof structure and road layout matched satellite and archive imagery. Chimneys, refinery structures matched file imagery of Tatneft's TANECO refinery. Radmir Belyayev, the mayor of Nizhnekamsk said that at least 12 people were killed as city’s industrial and civilian targets got attacked on Monday. NASA FIRMS detected thermal activities on August 10 in the direction of Nizhnekamsk oil refinery, where the smoke appeared to come from in the footage.
SHARE

உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் மத்திய தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் 456 டிரோன்கள் மூலம் மாபெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்ய ராணுவத்திற்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நோக்கில் டெனேகோ (TANECO) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடர்ஸ்டான் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான இந்த எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை உக்ரைன் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்தத் திடீர் டிரோன் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 13 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் தீவிர காயமடைந்த 21 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நேற்று இரவு முதல் காலை வரை உக்ரைனால் ஏவப்பட்ட 456 டிரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தின என்ற விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை.

அதேவேளையில், உக்ரைனின் கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் பதிலடித் தாக்குதலாக ரஷ்யா நடத்திய 126 டிரோன் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையைக் கடந்து இரு தரப்பும் நடத்தி வரும் சரமாரி டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் எல்லையோரப் பகுதிகள் பெரும் பதற்றத்திலும் அழிவிலும் மூழ்கியுள்ளன.

முந்தைய செய்தி முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்
அடுத்த செய்தி ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார்!

ஆகஸ்ட் 30, 2025
உலகம்

காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஆகஸ்ட் 17, 2025
உலகம்

ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

ஆகஸ்ட் 4, 2025
உலகம்

உக்ரைன்-ரஷ்யா புதிய சுற்றுச் சமாதானப் பேச்சுக்கள் அபுதாபியில் ஆரம்பம்!

நவம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?