Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் உயர் நீதிமன்றம் மாகாண அரசுக்கு விடுத்துள்ள உத்தரவு

ஆகஸ்ட் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் நிகழ்விற்கான ஒப்பந்தத்தை சட்டவிரோதமாக ரத்து செய்து, அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமையை மீறியதாகக் கியூபெக் மாகாண அரசுக்கும் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் கரோலின் புரூக்ஸ் (Caroline Proulx) அம்மையாருக்கும் கியூபெக் உயர் நீதிமன்றம் (Quebec Superior Court) 60,000 டொலருக்கும் அதிகமான அபராதத் தொகையை நஷ்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைத் தளமாகக் கொண்ட ‘ஹார்வெஸ்ட் மினிஸ்ட்ரீஸ் இன்டர்நேஷனல்’ (Harvest Ministries International) என்ற சுவிசேஷக் கிறிஸ்தவ அமைப்பு, கடந்த 2023 ஆம் ஆண்டு கியூபெக் நகர் மாநாட்டு மையத்தில், 10 நாட்கள் முன்னெடுக்கப்படும் மத நிகழ்வொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது.

எனினும், அந்த அமைப்பின் கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்கள் கியூபெக் மாகாண அரசின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி, அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சரான கரோலின் புரூக்ஸ் குறித்த மாநாட்டு மையத்திற்கான வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக, அந்த கிறிஸ்தவ அமைப்பு கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலேன் ட்ரூடெல் (Justice Alain Trudel), அரசு அமைப்பொன்று ஒரு குழுவின் கருத்துக்களை விரும்பவில்லை என்பதற்காக மட்டும் பொது வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார்.

” அரசுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அல்லது பிடிக்காத கருத்துக்கள் பொதுவெளியில் பேசப்படுவதைத் தடுப்பது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நியாயமான காரணியாக அமையாது” என்று கூறிய கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலேன் ட்ரூடெல், கியூபெக்கின் முன்னாள் அமைச்சர் கரோலின் புரூக்ஸ் தனது அதிகாரத்தைத் தன்னிச்சையாகவும் தவறாகவும் பயன்படுத்தியுள்ளார்” எனக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

முந்தைய செய்தி  கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு
அடுத்த செய்தி நோவாம் கோஷர் உணவக தீ விபத்து குறித்த விசாரணைகள் முடக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் வரைகலை நாவல் கலைஞர் ‘பூம்’,க்கு சர்வதேச பாராட்டு

ஜனவரி 30, 2026
கியூபெக்

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஜூலை 21, 2026
கியூபெக்

லோங்காய் நகர பொலிஸார் தொடர்பிலான விசாரணை ஆரம்பம்

ஜூன் 2, 2026
கியூபெக்

கியூபெக் அமைச்சரின் உருவ பொம்மை சிதைக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை

மே 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?