Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஜூலை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒகா மாகாணப் பூங்காவில் அமைந்திருக்கும் லேக் ஒஃப் டூ மவுண்டன்ஸ் (Lake of Two Mountains) ஏரியில் மூழ்கி காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொன்றியலுக்கு வடமேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒகா பூங்காவில், இருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவசர உதவிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக, அந்த ஏரியில் நீந்தச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கியதாகக் கியூபெக் மாகாண பொலிஸாரின் (Sûreté du Québec – SQ) செய்தித் தொடர்பாளர் எலிசபெத் மார்க்கிஸ் (Elizabeth Marquis) தெரிவித்துள்ளார்.

ஆபத்தான சூழலில் ஏரியில் தவித்துக் கொண்டிருந்த பெண்ணை, அப்பகுதியில் படகில் சென்ற இருவர் கவனித்து உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். எனினும், அவருடன் சென்ற இளைஞர் நீரினுள்ளே மூழ்கியதாகவும் மீண்டும் மேலே வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட போதிலும், அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பது குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஏரியில் மூழ்கி காணாமல்போன இளைஞரைத் தேடும் பணியில் கியூபெக் மாகாணப் பொலிஸாருடன் (SQ) இணைந்து கனேடியக் கடலோரக் காவல் படை (Canadian Coast Guard) மற்றும் மொன்றியல் பொலிஸார் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

படகுகள் மூலம் நீர்நிலைகளில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதோடு, பொலிஸ் அதிகாரிகளும் பயிற்சிநிலைப் பொலிஸாரும் ஏரிக் கரையோரப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அடுத்த செய்தி ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எரிசக்தி அமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னணி தயாரித்த கடிதத்தில் கையொழுத்திடோம் – சுமந்திரன் உறுதி

ஆகஸ்ட் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வு

ஜூலை 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

விமானப்படையினால் வழங்கப்பட்டுள்ள நவீன கணினி ஆய்வகம்

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?