மொண்ட்ரியல் மாநகராட்சியின் நிர்வாகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில் 1,000 அரசுப் பணியிடங்களைக் குறைக்கப் போவதாக மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் மொண்ட்ரியல் மாநகராட்சி ஊழியர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
மொண்ட்ரியல் மாநகராட்சி நிர்வாகம் தற்போது மிகவும் சிக்கலானதாகவும், மந்தமானதாகவும் மாறியுள்ளது.
இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) தெரிவித்துள்ளார்.
மொண்ட்ரியல் மாநகராட்சி நிர்வாகப் பிரிவில் அதிகாரிகள் எண்ணிக்கை 29% உயர்ந்துள்ள நிலையில், களப்பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
