Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீ புகையால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம்

ஜூலை 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ புகை காரணமாக மொன்றியல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காற்றுத் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இன்று பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என தெரிவித்துள்ளது.

காட்டுத்தீ புகை அதிகரிக்கும் போது, மக்களின் உடல்நல ஆபத்துகளும் அதிகரிக்கும் என்பதால், வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒத்திவைக்கவோ அல்லது மறுசீரமைக்கவோ பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த புகை காரணமாக கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், தலைவலி, இருமல் போன்ற லேசான அறிகுறிகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிலருக்கு மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் கடுமையான இருமல் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் கொண்டவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிபவர்கள் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முடிந்தவரை மூடியே வைத்திருக்கவும், காற்று சுத்திகரிப்பு வடிகட்டிகளை பயன்படுத்தவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா முதல் நோவா ஸ்கோஷியா வரை கனடா முழுவதும் 950-க்கும் அதிகமான காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருப்பதாகவும், இதனால் நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தர எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அல்பேர்ட்டாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள பொதுவாக்கெடுப்பு
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி

ஏப்ரல் 1, 2026
கனடாவிசேட செய்திகள்

நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்

ஏப்ரல் 18, 2025
உலகம்முதன்மை செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல் பணயக் கைதிகளின் விடுதலை தாமதமாகிறது..!!

பிப்ரவரி 12, 2025
கனடா

கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?