இராணுவத்தின் முன்னணி மற்றும் மிக முக்கிய ”ரெகுலர் ஃபோர்ஸ்” பட்டாலியன்களில் (Regular Force Battalions) ஒன்றின் கட்டளைத் தளபதி (Commanding Officer) மற்றும் அவரது பிரிவின் முதன்மை அதிகாரப் பொறுப்பில் இருந்த தலைமை வாரண்ட் அதிகாரி (Chief Warrant Officer) ஆகிய இருவர் தங்களின் உயர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் எட்மண்டன் (Edmonton) தளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற ‘3-வது பட்டாலியன், பிரின்சஸ் பாட்ரிசியாவின் கனேடிய லைட் இன்ஃபாண்ட்ரி’ (3rd Battalion, Princess Patricia’s Canadian Light Infantry) பிரிவின் லெப்டினன்ட்-கேணல் (Lt.-Col.) ஜேசன் ஹட்சன் மற்றும் தலைமை வாரண்ட் அதிகாரி கிம் டோர் ஆகிய இருவருமே, தற்காலிகமாகப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய ஆயுதப் படைகளின் (CAF) உயர் பதவிகளில் இருப்பவர்கள் எத்தகைய முன்மாதிரியான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகளின் பின்னணியில், இந்த வார இறுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கனேடிய இராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீக்கத்தை உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் தேசிய பாதுகாப்புத் துறை (DND), தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் 3-வது கனேடிய பிரிவுக்குள் (3rd Canadian Division) தற்போது ஒரு தீவிர விசாரணை உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக, அறிவித்துள்ளது.


