ரொயல் யோர்க் (Royal York) நிலையத்தில் TTC பேருந்தின் கீழ் சிக்கிய முதிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
இந்தப் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ரொயல் யோர்க் வீதி மற்றும் புளோர் வீதி மேற்கு ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ள ரொயல் யோர்க் நிலையத்தின் பேருந்து முனையப் பகுதியில் (Bus Bay Area) பிற்பகல் சுமார் 1:15 மணியளவில் நிகழ்ந்தது.
டொராண்டோ பொலிஸ் சேவையின் பேச்சாளர் இன்ஸ்பெக்டர் எரோல் வாட்சன் (Insp. Errol Watson) இதுகுறித்து ஊடகங்களிடம் பேசுகையில், “துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக” தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் வயதானவர் என்று மட்டும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது வயது மற்றும் அடையாளம் குறித்த விபரங்கள், உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
