Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த இலங்கை தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு பதின்ம வயதினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 21ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் Scarborough Town Centre வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது செய்யப்பட்ட தோடு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது பதியப்பட்டுள்ளது.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இவர்கள் இவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பெற்றோர்கள் 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழ் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
