பிரதமர் மார்க் கார்னியும், அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தும் தொழில்துறைக்கான புதிய கார்பன் உமிழ்வு வரி (Industrial Carbon Pricing) ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்கரி நகரில் நேரில் சந்தித்து உரையாடிய பின்னரே, இந்த அறிவிப்பினை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரு அரசுகளுக்கும் இடையே கையெழுத்தான எரிசக்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) தொடர்ச்சியாக இந்த புதிய முடிவு எட்டப்பட்டுள்ளது.இதன்படி, அல்பர்ட்டா மாகாணத்தின் தொழில்துறை கார்பன் வரி வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் ஒரு டன்னுக்கு 130 டொலர்களாக உயர்த்தப்படும் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான மத்திய அரசாங்கம் விதித்திருந்த கடுமையான இலக்குகளை மாற்றி, அல்பர்ட்டா மாகாணத்தின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கனடிய நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டில் அளித்த ஒரு தீர்ப்பின்படி, அனைத்து மாகாணங்களுக்கும் மத்திய அரசு சமமான வரி விதிப்பு நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதால், இந்த அல்பேர்ட்டாவுக்கு அளிக்கப்பட்ட புதிய இலக்கு, மற்ற மாகாணங்களுக்கும் புதிய நன்மைகளைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.