Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாண அரசு விதித்துள்ள அதிரடி நிபந்தனை

மே 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் அமையவுள்ள புதிய சர்வதேச ‘பாதுகாப்பு வங்கி’யின் (Defence Bank) தலைமையகம் மொன்றியலில் அமைந்தால், அதன் தலைமை அதிகாரி கண்டிப்பாகப் பிரெஞ்சு மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும் என கியூபெக் மாகாண அரசு அதிரடி நிபந்தனை விதித்துள்ளது.

நேட்டோ (NATO) நாடுகளின் ராணுவ மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ‘பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் மீள்திறன் வங்கி’ (DSRB) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 409 மில்லியன் டொலர் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த வங்கி ஆனது, நேட்டோ நாடுகளின் ஆயுதத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவுள்ளது..

இந்த வங்கியின் தலைமையகம் அமைக்கப்படும் வாய்ப்பினை தம்பக்கம் இழுக்க மொன்றியல் மற்றும் டொராண்டோ நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று கருத்துத் தெரிவித்த கியூபெக் அமைச்சர் கிறிஸ்டோபர் ஸ்கீட், “மொன்றியலில் இந்த வங்கி அமைந்தால், அதன் தலைவர் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மொன்றியல் உலகின் இரண்டாவது பெரிய பிரெஞ்சு மொழி பேசும் நகரம் என்பதால், இங்கு அமையும் சர்வதேச அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் உள்ளூர் மொழியை மதிக்க வேண்டும் என, கியூபெக் மாகாண அரசு வாதிடுகிறது.

இதற்கிடையில், “கியூபெக்கில் கடுமையான மொழிச் சட்டங்கள் (Bill 96) அமலில் உள்ளன, எனவே அங்கு வங்கி அமைந்தால் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்” என டொராண்டோ தரப்பு ரகசியமாகப் பரப்புரை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்தி கியூபெக் சொலிடேர்’ கட்சியின் முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி REM இன் அனைத்து இயக்கங்களையும் கண்காணிக்கும் பிரம்மாண்ட செயல்பாட்டு மையம் திறப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

தேர்தல் சார் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக கியூபெக் உள்ளது!

ஏப்ரல் 16, 2025
கியூபெக்

யாசின் மென்னாவிக்கு நான்கு அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

டிசம்பர் 4, 2025
கியூபெக்

கனடாவை தாக்கும் ‘எஸ்ரா’ புயல்

டிசம்பர் 30, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?