கனடாவின் 31-வது கவர்னர் ஜெனரலாக (Governor General) முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி அன்று பதவியேற்கவுள்ளார்.
தற்போது கனடாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்துக் கொண்டிருக்கும் மேரி சைமனுக்குப் (Mary Simon) பிறகு, அந்தப் பொறுப்பிற்கு லூயிஸ் ஆர்பர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுச் சேவையில் லூயிஸ் ஆர்பரின் அர்ப்பணிப்பு ஈடுஇணையற்றது எனப் பிரதமர் மார்க் கார்னி அவரைப் புகழ்ந்துள்ளார்.
லூயிஸ் ஆர்பர், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் முதலான இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பதால், கனடாவின் பன்முகத்தன்மையை உலகிற்குப் பறைசாற்ற இவரே தகுதியானவர் என, மத்திய அரசு கருதுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி அன்று கனடிய செனட் சபையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) முறைப்படி வைபவரீதியாக, கவர்னர் ஜெனரல் பதவியை ஏற்கவுள்ளார். அன்றைய தினம் அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
