Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ துப்பாக்கிச்சூட்டுச் சம்பவ குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஜூலை 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோவில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கில் அடையாளம் காணப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி அன்று, டொராண்டோவில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 12 வயது சிறுவன் டான்டே செபாஸ்டியன் ஆண்ட்ரேட்டா (Dante Sebastian Andreatta) உயிரிழந்தார்.

அச்சம்பவத்தில், மேலும் மூவர் காயமடைந்தனர்.

இக்குற்றச்செயல் தொடர்பான வழக்கிலேயே, தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், ரஷான் சேம்பர்ஸ் (Rashawn Chambers), ஜஹ்வேய்ன் ஸ்மார் (Jahwayne Smart), மற்றும் சிஜே ஹோப்ஸ் (Cjay Hobbs) ஆகியோர், முதல் நிலைக் கொலை மற்றும் ஐந்து கொலை முயற்சி முதலான குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகள் என, அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், ஒன்டாரியோ உயர் நீதிமன்ற நீதிபதி ஜோன் பாரெட் (Joan Barrett) நேற்றையதினம், இந்த மூவருக்கும் முதல் நிலை கொலைக் குற்றத்திற்காக 25 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனையை விதித்தார்.

அத்துடன், ஐந்து கொலை முயற்சி குற்றச்சாட்டுகளுக்காகவும் தலா ஐந்து ஆயுள் தண்டனைகளை அவர் விதித்தார்.

தண்டனைக்கான காரணங்களை விளக்கிய நீதிபதி பாரெட், இக்குற்றத்தின் தீவிரத்தை தண்டனை பிரதிபலிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தண்டனைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!
அடுத்த செய்தி நோவா ஸ்கோஷியாவில் பாரிய தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Study Permit விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்த கனடா அரசு

பிப்ரவரி 8, 2026
கனடா

பிரிவினைவாதப் போக்கு குறித்து டேனியல் ஸ்மித்தை சாடும் ஸ்டீபன் டியான்

பிப்ரவரி 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பொருளாதார அறிக்கையில் நிவாரணம் உள்ளடக்கப்படும் சாத்தியம்

நவம்பர் 25, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில்கைதான பெண் விடுவிப்பு!

அக்டோபர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?