கியூபெக் மாகாணத்தின் Longueuil பகுதியில் மீட்கப்பட்ட கைக்குழந்தை விவகாரம் தொடர்பில், கைது செய்யப்பட்ட 33 வயதுப் பெண் ஒருவர், சில நிபந்தனைகளுடன் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவராகக் கருதப்படும் 33 வயதுப் பெண் ஒருவர் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
எனினும், அவர் உடல் மற்றும் உளவியல் ஆலோசனை பெறுதல் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண் குழந்தையின் தாய் என்பதை பொலிஸ் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவர் மீது குழந்தைப் படுகொலை (Infanticide) குற்றச்சாட்டைப் பதிவு செய்வது குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது.
