Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைக்குழி அகழ்வில் மழை குறுக்கீடு

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் “கலி பவுசர்” மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

அகழ்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், செம்மணி பகுதியில் திடீரென மதியம் மழை பொழிந்தமையால் , அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டன. அத்துடன் புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீரும் தேங்க தொடங்கியது.

அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையின் கலி பவுசர்களை அழைத்து, அவற்றின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டன

இந்நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் இரண்டு என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 260 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 256 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை 12ஆம் நாள் அகழ்வு பணிகள் அரை நாட்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு இடையில் மழை குறுக்கிட்டால் , நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வு பணிகளை தாற்காலிகமாக இடைநிறுத்தி , ஓரிரு கிழமைகளில் பின்னர் நீதிமன்று குறிப்பிடும் நாளொன்றில் மீள ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கனடாவின் 31-வது கவர்னர் ஜெனரலாக பதவியேற்கிறார் முன்னாள் நீதியரசர் லூயிஸ் ஆர்பர்
அடுத்த செய்தி காத்தான்குடியில் போலியான அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து வைத்திருந்தவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக வைத்தியர் அருச்சுனா இராமநாதன்….

மார்ச் 20, 2025
இலங்கை

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்ட முல்லை மதிமிக்சர் நிறுவனத்தின் உரிமையாளர்!

பிப்ரவரி 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சுன்னாகத்தில் குழு மோதல் – ஐவர் காயம்

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?