நவீன கியூபெக் மாகாணத்தின் வரலாற்றை மாற்றியமைத்த முதன்மைச் சிந்தனையாளரும், முன்னாள் அமைச்சருமான கிளாட் மோரின் (Claude Morin) தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார்.
1960 மற்றும் 70-களில் கியூபெக் மாகாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சமூக மற்றும் அரசியல் மாற்றமான ‘அமைதிப் புரட்சியின்’ (Quiet Revolution) முக்கியக் கட்டடக் கலைஞர் என்று போற்றப்படும் கிளாட் மோரின், நேற்று காலமானார்.
பார்ட்டி கியூபெக்கோவா (PQ) கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் முதலமைச்சர் ரினே லெவெக் (René Lévesque) அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும் பணியாற்றிய இவர், கியூபெக் ஒரு நவீன மதச்சார்பற்ற மாநிலமாக உருவெடுக்க அடித்தளமிட்டவர் ஆவார்.
1960-களில் கியூபெக்கின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை நவீனமயமாக்கிய ‘அமைதிப் புரட்சியின்’ மூளையாக இவர் செயல்பட்டார்.
கியூபெக் மாகாணத்தின் சுயாட்சி அதிகாரங்களை வலுப்படுத்துவதில் இவர் முன்னோடியாக இருந்தார்.
1980-ஆம் ஆண்டு நடைபெற்ற கியூபெக் தனிநாட்டுக் கோரிக்கைக்கான (Sovereignty Referendum) பொது வாக்கெடுப்பின் முக்கிய வியூகத்தை கிளாட் மோரின் (Claude Morin) வகுத்திருந்தார்.
“படிப்படியான முன்னேற்றம்” (Étapisme) என்ற கொள்கையின் மூலம் கியூபெக்கின் தனித்துவமான இறையாண்மையை அடைய இவர் வழிகாட்டியுள்ளார்.
கிளாட் மோரின் மறைவுக்கு கியூபெக்கின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“நவீன கியூபெக் அரசு இன்று அனுபவிக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிய ஒரு மாபெரும் அறிஞரை நாம் இழந்துவிட்டோம்” எனப் பார்ட்டி கியூபெக்கோவா கட்சித் தலைவர் பால் செயின்ட் பியர் பிளமண்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
