கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் பெரும் தனியுரிமை மீறல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மில்லியன் கணக்கான வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்கள், அல்பெர்டாவை கனடாவிலிருந்து பிரிக்க வேண்டும் என வலியுறுத்தும் “சென்ட்யூரியன் பிராஜெக்ட்” என்ற குழுவின் இணையதளத்தில் சில நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவரங்கள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து தேர்தல் அல்பெர்டா விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக கனடிய காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அந்த இணையதளம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மக்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு குறித்து பெரிய கவலைகளை எழுப்பியுள்ளது.
