பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 174 இடங்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
“மக்களால் நேரடியாக வழங்கப்படாத, கட்சித் தாவல்கள் மற்றும் பின்வாசல் ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பெரும்பான்மை இது” என, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய்லிவ்ரே விமர்சித்துள்ளார்.
இத்தோல்விகளுக்காகத் தான் பதவி விலகப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘அவி லூயிஸ்’ (Avi Lewis) தலைமையில் இயங்கும் புதிய ஜனநாயகக் கட்சியானது, லிபரல் கட்சியின் மத்திய அரசானது, பெருநிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
கன்சர்வேட்டிவ் மற்றும் NDP கட்சிகளின் வீழ்ச்சியால் கிடைத்த வாக்குகளே லிபரல் கட்சியின் இந்த வெற்றிக்குக் காரணம் என, புளொக் கியூபெக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த பொதுத்தேர்தல் 2029-ஆம் ஆண்டில் தான் நடைபெறவுள்ளதால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, எதிர்க்கட்சிகளால் மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானத்தையும் தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
