கிரேக்க நாட்டின் 205-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மொன்றியல் நகரத்தின் ‘பார்க் எக்ஸ்டென்ஷன்’ (Parc Extension) பகுதியில் நேற்று பிரம்மாண்டமான வீதி ஊர்வலம் நடைபெற்றது.
நீலம் மற்றும் வெள்ளை நிறக் கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தங்களது கலாசார அடையாளத்தைப் பறைசாற்றினர்.
ஒட்டோமான் பேரரசிடமிருந்து 1821-ஆம் ஆண்டு கிரேக்கம் விடுதலை பெற்றதை நினைவுறுத்தும் வகையில் இந்த ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘ஃபுஸ்தனெல்லா’ (Fustanella) எனப்படும் பாரம்பரிய உடைகளை அணிந்து இசை முழங்க அணிவகுத்துச் சென்றனர்.
கிரேக்க சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு கலாச்சார அமைப்புகள் மற்றும் நடனக் குழுக்கள் இதில் பங்கேற்றன.
மொன்றியலில் உள்ள பல்வேறு கிரேக்கப் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கனேடிய மற்றும் கிரேக்கக் கொடிகளை ஏந்தி உற்சாகமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பிரதமர் மார்க் கார்னி, கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ மற்றும் மொன்றியல் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
