நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தேர்தல் காலங்களில் வெளிநாடுகளின் தேவையற்ற தலையீடுகளை முறியடிக்கவும் மத்திய அரசு புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் நிகழ்ந்த பொதுத்தேர்தல்களின் போது, சில வெளிநாடுகள் இரகசியமாகத் தாக்கத்தைச் செலுத்த முயன்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் பட்சத்தில், தேர்தல் ஆணையாளர் இனி சந்தேகத்திற்குரிய அமைப்புகளின் நிதி விபரங்களை ஆய்வு செய்யவும், சாட்சியங்களைக் கட்டாயமாகப் பெறவும் அதிகாரம் பெறவுள்ளார்.
அத்துடன், தேர்தல் விளம்பரங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்குப் பூரணத் தடை விதிக்கப்படுடும் நிலையும் ஏற்படவுள்ளது. அரசியல் விளம்பரங்களை யார் வழங்குகிறார்கள் மற்றும் அதற்காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்ற விபரங்களை, சமூக ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயச் சூழலும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டத்தை வரவேற்றாலும், நாட்டின் தேர்தல்களில் தலையீடு செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
