கனடாவில் வசிக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தங்களது அமெரிக்கக் குடியுரிமையை அதிகாரப்பூர்வமாகத் துறந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சிக்கலான வரி விதிப்பு முறைகளே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள், கனடாவில் வாழும் அமெரிக்கர்களைப் பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளன.
தங்களது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் தற்போதைய போக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதும் பல இரட்டைக் குடியுரிமையாளர்கள், அந்நாட்டுடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
