பிரதமர் மார்க் கார்னி இன்று இகலூயிட்டிற்கு விஜயம் செய்திருந்தார் இதன்போது ஆர்க்டிக் மற்றும் நுனாவுட் உள்கட்டமைப்பில் இராணுவத்தின் உள்கட்டமைப்பு மற்றும் இருப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.
ஃபெட்ஸ் Feds இராணுவ இருப்பில் $420 மில்லியன் மற்றும் நுனாவுட் உள்கட்டமைப்பில் $253 மில்லியன்களை முதலீடு செய்கிறது எனவும்தெரிவிக்கப்ட்டுள்ளது.
இது பிரதமர் மார்க் கார்னியின் முதல் உள்நாட்டுப் பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடா-அமெரிக்க எல்லையில் ஆர்க்டிக்கிற்குள் ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பை உருவாக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கனடா செயல்படும் என பிரதமர் ,மார்க் கார்னி அறிவித்தார்.
இந்த திட்டத்தில் கனடா $6 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்கிறது எனவும் இது 2022 இல் அறிவிக்கப்பட்ட வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளைக்கான (NORAD) நவீனமயமாக்கல் திட்டத்தில் ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ரேடார் அமைப்பின் நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்-கண்காணிப்பு திறன்கள் வடக்கு முழுவதும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்கும்” என பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆஸ்திரேலியா, ஒரு “நீண்டகால பாதுகாப்பு கூட்டாளி” எனவும் , இந்த அமைப்பு விரைவாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கனடாவின் நிலம், நீர் மற்றும் கடல் மீதான இறையாண்மையைப் பாதுகாக்க புதிய பணத்தில் 420 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது .
இந்தப் பணம் கனேடிய ஆயுதப் படைகள் ஆர்க்டிக்கில் “அதிகமான, நீடித்த மற்றும் ஆண்டு முழுவதும்” இருப்பைக் தக்க வைக்க அனுமதிக்கும், எனவும் மேலும் வடக்கில் அதன் பயிற்சி மற்றும் வரிசைப்படுத்தலை விரிவுபடுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.