கியூபெக் மாகாணத்தில் இதய அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில், உண்மையை மறைப்பதாக (Gaslighting) மாகாண சுகாதார முகவரகமான சாந்தே கியூபெக் மீது மருத்துவச் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன.கடந்த ஓராண்டில் மட்டும் கியூபெக்கில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அறுவைசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் இருந்தபோதே உயிரிழந்துள்ளனர்.
இது கியூபெக் மாகாண வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 26 வாரங்களுக்கு மேலாக சுமார் 65 சதவீத நோயாளிகள் இன்னமும் அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில் பயிற்சி பெற்ற இதய-நுரையீரல் இயந்திரங்களை (Heart-Lung Machine) இயக்கும் விற்பன்னர்ளில் 50 சதவீதத்தினர் ஒன்ராறியோ அல்லது அமெரிக்காவிற்குப் பணிக்குச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்குக் கியூபெக்கை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படுவதே இதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கியூபெக்கில் சுமார் 130-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சை கூடங்கள் (Operating Rooms) மூடிக்கிடப்பதாகக் கூறப்படுகின்றது.
